லிபியாவில் கடத்தப்பட்ட இரண்டு இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் ஆந்திராவை சேர்ந்த டி.கோபாலகிருஷ்ணன், தெலுங்கானாவை சேர்ந்த பல்ராமகிருஷ்ணன் ஆகியோர், லிபியாவில் பயங்கரவாதிகளால் கடத்தி செல்லப்பட்டனர். இவர்கள் சிர்ட்டே பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.
திரிபொலி விமான நிலையத்தில் வைத்த்து அவர்கள் கடத்தப்பட்டனர். இரண்டு பேரையும் மீட்க வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்நிலையில், இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.