தற்போதைய செய்திகள்

சென்னையில் தொடரும் மழை

DIN

இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

விடுமுறை தினங்களுடன் மழையையும் சேர்த்து மக்கள் கொண்டாடும்படி அமைந்திருந்தது இந்த மழையின் துவக்கம். ஆனால் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்துவந்ததால் மக்கள் கடந்த வருட நினைவுகளில் சற்று அச்சத்துடன் தான் மழையை எதிர்கொள்கின்றனர்.

அண்ணாசாலை, வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், போரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், ஈஞ்சம்பாக்கம், கத்திப்பாரா, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாரலுடன் மிதமான மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT