தற்போதைய செய்திகள்

தரமற்ற மதிய உணவால் மூன்று ஆண்டுகளில் 900 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டார்கள், இறப்பு எண்ணிக்கை ‘0’: மனித வள மேம்பாட்டுத்துறை!

RKV

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தரமற்ற உணவுக்காக மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு 2016 முதல் 35 புகார்கள் வந்துள்ளன

கடந்த மூன்று ஆண்டுகளில் மதிய உணவு உட்கொண்டதால் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே காலகட்டத்தில் தரமற்ற உணவு தரம் குறித்து 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து (யு.டி.) 35 புகார்களை அமைச்சகம் பெற்றுள்ளது.

"மொத்தம் 930 குழந்தைகள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படுகிறது, கடந்த மூன்று ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் நாட்டில் இதுபோன்ற உணவை சாப்பிட்ட பின்னர் அவர்களில் யாரும் இறக்கவில்லை. தகுதியான குழந்தைகளுக்கு சமைத்த மற்றும் சத்தான மதிய உணவை வழங்குவதற்கான ஒட்டுமொத்த பொறுப்பு மாநில அரசுகளிடம் உள்ளது, ”என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதிய உணவு திட்டம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் வருகிறது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கைகளை (ஏடிஆர்) வழங்குமாறு தொடர்புடைய மாநில அரசுகள் கோரப்பட்டன, என சம்பந்தப்பட்ட உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்

"பெறப்பட்ட அறிக்கைகளின்படி, குறிப்பிட்ட பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரிக்கு எதிராக எச்சரிக்கை விடுப்பது, சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் ஒப்பந்தத்தை நிறுத்துதல், குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்குவது மற்றும் உரிய முறைகளைப் பின்பற்றத் தவறிய நபர்களுக்கு எதிராக அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள்" மேற்கொள்ளப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.

பள்ளி அளவிலான சமையலறைகளில் தரம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த வழிகாட்டுதல்களையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டுதல்கள் மதிய உணவு தயாரிக்க AGMARK தரமான பொருட்களை வாங்குவது, பள்ளி நிர்வாகக் குழுவின் இரண்டு அல்லது மூன்று... வயதுவந்த உறுப்பினர்களால் உணவைச் சுவைப்பது, குறைந்தது ஒரு ஆசிரியர் உட்பட... என குழந்தைகளுக்கு சேவை செய்வதற்கு முன் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை அந்த வழிகாட்டிகள் வழங்குகின்றன" என்று துறை அதிகாரி கூறினார்.

Related Article

நட்ட நடுக்கடல், பெரும்புயல்... 5 நாட்கள் மழைநீரை மட்டுமே அருந்தி உயிர் தப்பிய மீனவர்!

மானியமில்லாத கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு!

மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாய் இருக்கலாம்! அதனால் என்ன?

மெட்டீரியலிஸ்டிக் மனிதர்களுக்கு இது கொஞ்சம் பைத்தியக்காரத் தனமாய் இருக்கலாம்! அதனால் என்ன?

நாயுடுவின் வீடு - அலுவலகத்தை இடிக்க உத்தரவு... பொது நலம் பேணுதலா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா?!

நாயுடுவின் வீடு - அலுவலகத்தை இடிக்க உத்தரவு... பொது நலம் பேணுதலா அல்லது பழிவாங்கும் நடவடிக்கையா?!

திருமணமான 23 நாட்களில் கணவரை கைவிட்டு லெஸ்பியன் பார்ட்னருடன் வாழச்சென்ற இளம்பெண்!

திருமணமான 23 நாட்களில் கணவரை கைவிட்டு லெஸ்பியன் பார்ட்னருடன் வாழச்சென்ற இளம்பெண்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்க வரவேற்ற தந்தை!

ஆவேஷம் பட பாணியில் ரீல்ஸ் செய்த பதிரானா- முஸ்தஃபிசூர்!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

அயோத்தியா வந்தார் திரௌபதி முர்மு

SCROLL FOR NEXT