மே 4 முதல் உள்நாடு, ஜூன் 1 முதல் வெளிநாடு விமான சேவை: ஏர் இந்தியா
மே 4 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது.
நாட்டில் மே 4 ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தடங்களில் உள்நாட்டு விமான சேவைகளுக்கான முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
மேலும், ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்கான விமான சேவைகளுக்கு முன்பதிவை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது.
கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டதுடன், ரயில், விமானப் போக்குவரத்தும் முடக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இரு தவணைகளாக அறிவிக்கப்பட்ட ஊரடங்குகள், வரும் மே 3 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன.
வரும் 20 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மே 4 முதல் இந்தியாவுக்குள் விமானப் போக்குவரத்து தொடங்குவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியுள்ள ஏர் இந்தியா.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.