முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லி மருத்துவமனைகளில் தில்லிக்காரர்களுக்கு மட்டுமே அனுமதி: கேஜரிவால்

மத்திய அரசு மருத்துவமனைகளைத் தவிர தில்லியிலுள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் தில்லி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

Updated On : 7 ஜூன் 2020, 4:26 pm IST
பகிர்:

மத்திய அரசு மருத்துவமனைகளைத் தவிர தில்லியிலுள்ள மருத்துவமனைகள் அனைத்திலும் தில்லி மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா நோயாளிகள் அதிகரித்துவரும் நிலையில், தில்லியிலுள்ள தனியார் மருத்துவமனைகளிலும்கூட  தில்லியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாட்டில் வேறெங்குமே கிடைக்காத சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய கேஜரிவால், மேலும் தில்லியில் திங்கள்கிழமையிலிருந்து உணவகங்கள், மால்கள். மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் திறக்கப்படுகின்றன என்றும் தில்லியின் எல்லைகளும் திறந்துவிடப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

ஒருவேளை கரோனா நோயாளிகளைத் தங்கவைக்கத் தேவைப்படலாம் என்பதால் விடுதிகள் மற்றும் அரங்கங்கள் எதுவும் திறக்கப்படவில்லை என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments