தற்போதைய செய்திகள்

முகநூலில் திருமாவளவன் குறித்து அவதூறு: பாஜக பிரமுகர் மீது வழக்குப் பதிவு

DIN

சிதம்பரம்:  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாக, களங்கம் கற்பிக்கும் வகையில் பதிவிட்ட பாஜக பிரமுகர் மீது சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து முகநூலில் அவதூறாகவும், அவரது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிதம்பரத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி துணைத் தலைவர் கோபிநாத் பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்டித்தும், பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் மாவட்டச் செயலாளர் பால .அறவாழி தலைமையில் செய்தி தொடர்பாளர் திருவரசு மற்றும் கட்சி நிர்வாகிகள் திரண்டு சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.கார்த்திகேயன், நகர காவல் நிலைய ஆய்வாளர் சி. முருகேசன் ஆகியோரை சந்தித்து புகார் மனு அளித்தனர். 

புகாரின் பேரில் சிதம்பரம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT