தற்போதைய செய்திகள்

நிவர் புயல்; வேல் யாத்திரை ரத்து: எல்.முருகன் பேட்டி

DIN


திருச்சி: நிவர் புயல் காரணமாக பாஜகவின் வேல் யாத்திரை ரத்து செய்யப்பசுவதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது: 

நிவர் புயல் காரணமாக ஏற்கனவே தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றி வேல் யாத்திரை ரத்து செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மாவட்டங்களிலும் புயல் காரணமாக வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது. டிசம்பர் 4 ஆம் தேதி அறுபடை வீடுகளில் வழிபாடு மட்டும் நடத்திவிட்டு டிசம்பர் 5 ஆம் தேதி வேல் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி திருச்செந்தூரில் நடைபெறும்.

தமிழக அரசு நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக முழுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். புயல் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண பணிகளில் பாஜகவினர் ஈடுபடுவார்கள்.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து அதிமுக உறுதி செய்த நிலையில் பாஜக தரப்பில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் அறிவிக்கும்.

எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து கலந்தாலோசித்து அறிவிக்கப்படும். அமித்ஷாவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய ஆலோசனையில் பாஜக 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம் தான். எத்தனை இடங்கள் கேட்பது போன்றவை குறித்து இப்பொழுது ஜாதகம் பார்க்க தேவையில்லை.

ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் ஒரு நல்ல முடிவை எடுப்பார். சரியான நேரத்தில் சரியான முடிவை ஆளுநர் அறிவிப்பார் என முருகன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT