கரோனா பரவல் காரணமாக மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக் கூடாது என்றும், வேட்பாளர்கள், முகவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ளது.
அன்றைய நாளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
- வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூட்டமாகவோ, தனித்தனியாகவோ கூடக் கூடாது.
- முகவர்கள் கரோனா நெகடிவ் சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
- வாக்கு எண்ணும் மையம் பெரியதாக இருக்க வேண்டும். அங்கு சமூக இடைவெளியைக் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- வாக்கு எண்ணும் பணியைத் தொடங்கும் முன்பு அறை முழுவதையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
- சீலிடப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட் போன்றவற்றையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
- வாக்குப் பெட்டி வைத்து எண்ணும் மேஜைகளை அறையின் அளவுக்கேற்ப கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து வைக்க வேண்டும்.
தேர்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்: கிளிக் செய்யவும்