உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சியில் கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சி உள்பட சீமானூத்து அருகே வத்தலக்குண்டு சாலையில் சீமானூத்து ஊராட்சி மன்றத் தலைவர் அஜித் பாண்டி தலைமையில் திமுக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி 3 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் கருணாநிதி உருவ படத்திற்க்கு மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதில், திமுக கட்சி நிர்வாகிகள், மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.