முகப்பு
தற்போதைய செய்திகள்

சீர்காழியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடந்தது.

Updated On : 5 டிசம்பர், 2021 at 1:46 PM
சீர்காழியில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:07 AM

சீர்காழி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே நடந்த நிகழ்வுக்கு  அதிமுக  மாவட்ட அவை தலைவர் பி.வி.பாரதி தலைமை வகித்து ஜெயலலிதா திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நகர செயலாளர் வினோத், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மா.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே. சந்திரசேகரன், ரவிச்சந்திரன் கே.எம்.நற்குணன், சிவகுமார், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக நிர்வாகிகள் நெடுஞ்செழியன், பரணிதரன், ஏவி மணி ,நாகரத்தினம், மகளிர் அணியைச் சேர்ந்த  ரீமா, இறை எழில் , ரமாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.