தற்போதைய செய்திகள்

நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 6650 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி 7051 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 374 பேர் பலியாகியுள்ள நிலையில் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,79,133ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 3,42,15,997 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 77516 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

பிரதமர் மோடியாக நடிக்கிறேனா? - நடிகர் சத்யராஜ் விளக்கம்

SCROLL FOR NEXT