முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை கடற்கரையில் ஜெயலலிதா சிலை திறப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
ஜெயலலிதாவிற்கு அமைக்கப்பட்ட வெண்கல சிலை
பகிர்:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு காமராஜர் சாலையில் அமைக்கப்பட்ட வெண்கல சிலையை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை மெரீனா கடற்கரை சாலையிலுள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு   9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டது.

இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.   

சிலை திறப்புக்கு பின்னர் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் வடிவமைத்த டிரோன் மூலம் ஜெயலலிதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும், லேடி வெலிங்டன் கல்லூரியிலுள்ள உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதாவின் பெயரை சூட்டி முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.