தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம்: ஜூலை 15 வரை நீட்டிப்பு 

DIN


புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.

இதனிடையே கடந்த ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் தளர்வுகளுடன் பொது முடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அந்தப் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்ததை அடுத்து, புதுச்சேரி அரசு சார்பில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டித்து புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு உத்தரவின்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் தொடர்கிறது, தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியவசிய கடைகள் மற்றும் பிற அனைத்து வித கடைகளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இரவு 9 மணி வரை புதுச்சேரிக்குள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்கள் எப்போதும் இயங்கலாம்.

திரையரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகங்களுக்கு தடைதொடர்கிறது. 

அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்கா போன்றவை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

மதுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும், விவசாய பணிகள் அனைத்துக்கும் அனுமதிக்கப்படும்.

வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் போன்றவை முழு நேரம் செயல்படும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT