தற்போதைய செய்திகள்

கடுமையாகும் ஊரடங்கு: உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

DIN


சென்னை: ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் அதனை கடுமையாக்குவது குறித்து டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்து வருகிறார். 

ஊரடங்கு விதிகளை பலர் பின்பற்றாத சூழலில் அதனை கடுமையாக்குவது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்தை கேட்டறிந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் டிஜிபி உள்ளிட்ட காவல் உயரதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

ஆலோனை கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் பங்கேற்றுள்ளனர். 

மக்கள் தேவையின்றி வெளியே சுற்றுவதை தடுக்க தளர்வுகளை குறைப்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருவதகாவும், கூட்டம் முடிந்ததும் புதிய கட்டுப்பாடு அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT