கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

DIN

3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள சி.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் வீ.அக்னிவீரன் (52). இவர் கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று, நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மீனவர் அக்னிவீரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞர் எஸ்.கலாசெல்வி கூறியதாவது, நீதிபதி தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகநலத்துறை நலவாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெற்று வழங்க வேண்டுமெனவும் கூறியிருப்பதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் முதல் செமிகண்டக்டர் சிப் 2025 இறுதிக்குள் சந்தைக்கு வரும்: பிரதமர் மோடி

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

SCROLL FOR NEXT