மகாராஷ்டிரத்தில் புதிதாக 46,723 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 46,723 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | கர்நாடகத்தில் ஒரே நாளில் 21,390 பேருக்கு கரோனா தொற்று
இதுதவிர 28,041 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதுவரை மொத்தம் 66,49,111 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.