தற்போதைய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு 

குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

DIN

புது தில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை இறுதி செய்வதற்கு நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து பேசிய பாஜக தலைவர் ஜெ. பி. நட்டா, "முதல்முறையாக பழங்குடி சமூகத்தை சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

SCROLL FOR NEXT