முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஒரேநாளில் 214 பேருக்கு கரோனா

தமிழகத்தில் மேலும் 214 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

தமிழகத்தில் மேலும் 214 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் இன்று புதிதாக 214 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 53 போ், செங்கல்பட்டில் 21 போ், கோவையில் 13 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.  

இதனால் மொத்த பாதிப்பு 35,90,452-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று யாரும் உயிரிழக்கவில்லை. இன்று ஒரு நாளில் மட்டும் 402 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,49,088-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,316 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →