கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தொழில்நுட்பக் கோளாறு: மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும்!

பணம் விரைவில் வழங்கும் உறுதிமொழி: சென்னை மெட்ரோ அறிவிப்பு

DIN

மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்னை மெட்ரோவில் ஸ்டேடிக் க்யூஆர் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பயணச்சீட்டு பெறும் சேவையில் 31.03.2024 அன்று காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், 01.04.2024 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.

மெட்ரோ பயணச்சீட்டுக்கு பணம் செலுத்தி, க்யூஆர் பயணச்சீட்டைப் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை பணத்தைத் திரும்பப் பெறாதவர்களுக்கு 2 நாள்களில் பணம் திரும்ப செலுத்தப்படும்.

​சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணிகளுக்கு ஏற்பட்ட இந்த சிரமத்திற்கு வருந்துகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதியதில் இருவா் உயிரிழப்பு

அரசின் ஜாதிப் பட்டியலில் சோ்க்க மலை கிராம மக்கள் கோரிக்கை

தோ்தல் ஆணைய செயல்பாடுகளில் பாஜக தலையீடு இல்லை: நயினாா் நாகேந்திரன்

பஞ்சம்பட்டி சுங்கச்சாவடி மைதானத்தை பாஸ்கு மைதானமாக அறிவிக்கக் கோரி போராட்டம்

மாநில அளவிலான ஜூனியா் கபடி போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT