மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை கொலை
தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே மகளை கேலி செய்ததை தட்டிக் கேட்ட தந்தை வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே தோட்டக்காடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் எஸ். சத்தியமூர்த்தி (51). கூலித் தொழிலாளியான இவரது மகன் அபிஷேக்கின் (22) பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அபிஷேக்கின் நண்பரான தோட்டக்காடு மாதா கோயில் தெருவைச் சேர்ந்த ஏசுதாஸ் மகன் ரூபன் (22) கலந்து கொண்டார்.
அப்போது, அபிஷேக்கின் தங்கையை ரூபன் கிண்டல் செய்துள்ளார். இதை சத்தியமூர்த்தி தட்டிக் கேட்டசத்தியமூர்த்தி ரூபனின் வீட்டுக்குச் சென்று அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளார். பின்னர், காமராஜ் நகர் தெரு முனையில் நின்றுகொண்டிருந்த ரூபனை சத்தியமூர்த்தி கண்டித்துள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சத்தியமூர்த்தி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்தியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தாலுகா காவல் நிலை போலீசார் வழக்குப் பதிந்து ரூபனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.