FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மீண்டும் முதலிடத்தை தக்கவைத்த பிரபல தொடர்: இந்த வார டிஆர்பி!

இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

16 ஆகஸ்ட் 2024, 5:54 pm IST
சிறகடிக்க ஆசை, சிங்கப்பெண்ணே. - Instagram
பகிர்:

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.

ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர்கள் எவை என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

பல வாரங்களாக இரண்டாம் இடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே தொடர் இந்த வாரம் 9.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Advertisement

Advertisement

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 8.58 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

மூன்றாம் இடத்தைப் பிடித்த மருமகள் தொடர் 7.63 டிஆர்பி புள்ளிகளையும், நான்காம் இடத்தைப் பிடித்த வானத்தைப் போல தொடர் 7.52 டிஆர்பி புள்ளிகளியும் பெற்றுள்ளன.

சுந்தரி தொடர் 7.21 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. மல்லித் தொடர் 7.06 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து, சில வாரங்களாக முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர் 6.90 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பாக்கியலட்சுமி தொடர் 5.66 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5.44 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இராமயணம் தொடர் 5.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த வாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பிடித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments