இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் காலமானார்
இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சென்னை: இந்திய கடலோர காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் காலமானார்.
சென்னையில் புதிதாக கட்டப்பட்ட அதிநவீன இந்தியக் கடலோரக் காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையக் கட்டடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில், இந்திய கடலோர காவல்படை காவல்படை தலைமை இயக்குநர் ராகேஷ் பாலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தார்.
இதையடுத்து தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவம் பொறித்த நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு புறப்பட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் இந்திய கடலோர காவல்படை தலைவர் ராகேஷ்பால் உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2023 ஜூலை 19 முதல் இந்திய கடலோர காவல் படையின் 25 ஆவது தலைமை இயக்குநராக ராகேஷ் பால் பொறுப்பு வகித்து வந்தார்.