முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட், 2024 at 3:11 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை(ஆக.21) காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வடதமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஆக.21) முதல் ஆக.26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புதன்கிழமை (ஆக.21) காலை 10 மணி வரை கோவை, திருநெல்வேலி, தென்காசி, தேனி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

முன்னதாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும்(ஆக.21, 22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →