திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சியின் போது அம்பாளுக்கு சாற்றுவதற்கு கொண்டுவரப்பட்ட முத்தங்கி  
தற்போதைய செய்திகள்

திருக்கடையூரில் ஒரு கோடி முறை அபிராமி அந்தாதி பாராயண நிறைவு!

உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த மேனகாதேவி கங்காதரன், சென்னை உமா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கரோனா காலத்தில் உலக நன்மைக்காக அபிராமி அந்தாதியை ஒரு கோடி முறை பாராயணம் செய்ய முடிவு செய்தனர்.

அம்பாளுக்கு சாற்றப்பட்ட முத்தங்கி

வாட்ஸ் ஆப் குழு மூலம் 1000 பேர் இணைந்தனர். நாள்தோறும் காலை 8.30 மணி முதல் பாராயணம் செய்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக 1 கோடி முறை பாராயணம் செய்தனர்.

அதன் நிறைவு விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு முத்தங்கி சாற்றப்பட்டது.

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே அபிராமி அந்தாதி. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT