FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி..

Updated On : 13 டிசம்பர் 2024, 7:58 pm IST
- கோப்புப்படம்
பகிர்:

தில்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்மாநில ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியை தில்லி நகர காவல்துறையினர் கடந்த புதன்கிழமை (டிச.11) துவங்கினர்.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் பலி!

இதுகுறித்து தில்லி மாநில காவல்துறை உயர்அதிகாரி ரவிக்குமார் சிங் கூறுகையில், நடத்தப்பட்டுவரும் சோதனைகளில் கைது செய்யப்பட்ட இருவரும் கலிண்டி குண்ஜ் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதி ஆகிய இடங்களில் பதுங்கியிருந்ததாகவும்,அதில் ஒருவர் வங்கதேசத்தில் ஒரு தரகரிடம் ரூ.25,000 கொடுத்து டிச.6 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்து இங்கு வேலை தேடி வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் பல்வேறு இந்தியப் பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்நாட்டினர், வேறு வழியின்றி பிழைப்புத் தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments