கோப்புப் படம் 
இந்தியா

புணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 11 வங்கதேச பெண்கள் கைது!

புணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 11 வங்கதேச பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மகாராஷ்டிர மாநிலம் புணேவில், சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புணே மாவட்டத்தின் புத்வார் பெத் பகுதியில், சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்கள் வசித்து வருவதாக, அம்மாநில காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல் துறையினர் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில், போலியான ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வசித்து வந்த 22 பெண்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரெட் லைட் பகுதி எனக் கூறப்படும் புத்வார் பெத்தில் கைது செய்யப்பட்ட 22 பெண்களில் 11 பேர் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் என காவல் துறை துணை ஆணையர் க்ருஷிகேஷ் ராவாலே கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, கொல்கத்தாவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாக, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 6 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11 illegal Bangladeshi women have been arrested in Pune, Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"எங்களுக்கு வேலை நிறைய இருக்கு": தவெக அனந்தஜித்

கடைசி லீக் போட்டியில் இந்தியா பேட்டிங்: அணியில் 2 மாற்றங்கள்!

பூட்டுக்கு இனி சாவி தேவையில்லை! ஸ்மார்ட் லாக் சிறப்புகள் என்னென்ன?

பிப். 23-ல் வேலூரில் விஜய் பிரசாரம்: 20 நிபந்தனைகளை விதித்த காவல் துறை!

எப்போது இந்தியா வருவேன் எனக் கூறமுடியாது! - மும்பை உயர் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா பதில்!

SCROLL FOR NEXT