கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தீபாவளி முன்பதிவு: சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்த ரயில் டிக்கெட்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புறப்படும் விரைவு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று(ஜூலை 2) தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பண்டிகைக்கு 2 நாள்கள் முன்பாக அக்.29-ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு திங்கள்கிழமை தொடங்கி, விரைவாக விற்றுத்தீர்ந்தது.

இந்த நிலையில், அக். 30- ஆம் தேதிக்கான ரயில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று(ஜூலை 2) தொடங்கிய நிலையில், 5 நிமிடங்களிலேயே விற்றுத்தீர்ந்தது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிவடைந்ததால், பயணிகள் பலர் ஏமாற்றமடைந்தனர்.

குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 2 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்தது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் அக்.31-க்கான முன்பதிவு புதன்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.100 கோடியை நோக்கி நிவின் பாலியின் சர்வம் மாயா!

வைகோவின் நடைபயணத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

திருப்பதி: 2025 இல் லட்டுகள் விற்பனையில் சாதனை!

சரத் குமாரின் புதிய பட போஸ்டர்!

தனியார் பேருந்து மீது மோதிய பைக்! தீக்கிரையாகிய வாகனங்கள்!

SCROLL FOR NEXT