மேட்டூர் அணை நீர்மட்டம் 68.91 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியாக உயர்ந்துள்ளது.
தற்போதைய செய்திகள்மேட்டூர் அணை நீர்மட்டம் 68.91 அடியாக உயர்வு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68.91 அடியாக உயர்ந்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை, நுகு அணைகள் நிரம்பிய நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி அதிக அளவில் உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று(ஜூலை 21) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 68 .91 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 71,777 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 31.77 டிஎம்சியாக உள்ளது.