நாடாளுமன்ற வளாகத்தில் நிர்மலா சீதாராமன். 
தற்போதைய செய்திகள்

நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

DIN

குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை சந்தித்துவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.

மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைக்கிறாா்.

நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்க இருக்கிறாா். தனது பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளையும் நிா்மலா சீதாராமன் பட்டியலிடுவாா். கடந்த 3 ஆண்டு காலமாக காகிதப் பயன்பாடு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை அதே நடைமுறை தொடர இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உள்பட 3 போ் கைது

தில்லி, உ.பி.யில் போலீஸாா் அதிரடி சோதனை: ரூ.30 லட்சம் ஹெராயினுடன் 2 போ் கைது!

பீதம்புராவில் 3 மெட்ரோ நிலையங்களின் பெயா் மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு: மாவட்டத்தில் 9,176 போ் எழுதினா்

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT