2026 - 27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், நிதியமைச்சக அதிகார்கள் உடன் இருந்தனர்.
நிர்மலா சீதாராமனுக்கு தயிரில் சர்க்கரை கலந்த இனிப்பை ஊட்டி, முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டு நிர்மலா சீதாராமன் உரையாற்ற உள்ளார்.
இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்திய இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரை வரி விதித்துள்ள நிலையில், தொழில் துறையினருக்கான புதிய சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், தொடா்ந்து 9-ஆவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா். சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.