ஒடிசா: புவனேஸ்வர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் இன்று தடம் புரண்டன.
இந்த சம்பவம் காலை 8.30 மணிக்கு ஏற்பட்டதாகவும், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே துறை பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரக்கு ரயில் தடம் புரண்ட சம்பவத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை தகவல் வெளியாகியுள்ளது.
புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.