முதல்வர் ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை.

DIN

மேட்டூர் அணை திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின.

அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 107.69 அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை நாளை(ஜூலை 29) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . அதன் பிறகு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படும்.

இந்நிலையில், மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இக்கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூடியூப் சேனல் பார்வைகளுக்காக இப்படி செய்ய வெட்கமாக இல்லையா? முன்னாள் கேப்டனை வெளுத்து வாங்கிய கௌதம் கம்பீர்!

தெய்வ தரிசனம்... எம பயம், பாவங்கள் நீக்கும் பிரம்மபுரீஸ்வரர் திருக்கடையூர்!

கரூரில் பலியானோருக்கு பேரவையில் அஞ்சலி! | TN Assembly

ஆபரேஷன் சிந்தூர்: ஒரே நாளில் பங்குச் சந்தை மீது 40 கோடி சைபர் தாக்குதல்கள்!

ஐபிஎஸ் அதிகாரி பூரண் குமாரின் குடும்பத்தினரை சந்தித்து ராகுல் ஆறுதல்!

SCROLL FOR NEXT