சேலம்: பாஜக உடன் இனி கூட்டணி இல்லை. அதிமுக மீண்டும் வலுப்பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் ஓமலூர் அதிமுக புறநகர் கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஊடகங்களில் விவாதம் நடக்கிறது; எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா,பல மத்திய அமைச்சர்கள் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.பாமக நிறுனவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் , கூட்டணியில் அங்கம் வகித்த பல்வேறு தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.
திமுக பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின்,அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குகள் சேகரித்தனர். கூட்டணியில் அங்கம் வசித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பிரசாரம் செய்தார்.விசிக தலைவர் தொல் திருமாவளன், கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களும் பிரசாரம் செய்தனர்.
அதிமுகவில் நான் ஒருவன் தான் பிரசாரம் செய்தேன். கூட்டணியிலிருந்து தேமுதிக தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
இந்தியா கூட்டணிக்கு பலம் அதிகம். அதிமுக கூட்டணிக்கு பலம் இல்லை என பத்திரிகைகள் ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வந்தது.
இதற்கிடையே அதிமுக 2019 மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளுடன் தற்போது ஒரு சதவீதம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ளது.இது அதிமுக கிடைத்த வெற்றியாகும்.
பாஜக குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது.திமுகவும் குறைவான வாக்கு பெற்றிருக்கிறது.
அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும்.ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை.
முடிந்து போன கதை
சசிகலா,ஓபிஎஸ் பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவோம் கூறியிருக்கிறார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அது
குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர்.அவர்களெல்லாம் பிரிந்து சென்றதால், ஒரு சில இடங்களில் அதிமுகவுக்கு கூடுதலாக வாக்குகள் கிடைத்துள்ளது என்று கூறினார்.
கோவையில் அண்ணாமலை குறைவான வாக்குகள் தான் வாங்கி உள்ளார். ஒவ்வொரு முறையும் மக்களவைத் தேர்தல் என்றாலும், சட்டப்பேரவைத் தேர்தல் என்றாலும் வாக்கு வித்தியாசம் மாறி மாறித் தான் வரும். சூழ்நிலைக்கு தக்கவாறு மக்கள் வாக்களிக்கிறார்கள்.
2024 தேர்தலில் அதிமுக அதிகமான வாக்குகள் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக வளர்ந்து விட்டதாக செய்திகள் வருகிறது.தேர்தலில் பாஜக கூட்டணி அதிகவாக்குகள் பெற்றதாக தவறான செய்தி வருகிறது.
திமுக 2019 ஆம் ஆண்டு 33.52 சதவீதம். 2024 தேர்தலில் 26.93 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது.திமுகவின் வாக்குசதவீதம் குறைந்திருக்கிறது.அதிமுக தான் கூடுதல் வாக்குகள் பெற்றிருக்கிறது.பாரதிய ஜனதா குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறது.
தென்மாவட்டங்களில் அதிமுக வலுப்பெற்று இருக்கிறதா? என்ற என்ற கேள்விக்கு, தற்போது நடந்தது மக்களவைத் தேர்தல் வேறு? சட்டப்பேரவைத் தேர்தல் இல்லை. மக்களவைத் தேர்தல் மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற தேர்தலாகும். அதிமுக வளர்ந்துதான் வருகிறது.
அந்தந்த தேர்தலில் சூழ்நிலைக்கு தக்கவாறு வெற்றி தோல்வி அமையும்.ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பதில்லை.திட்டமிட்டு பொய்யான தகவல்களை தெரிவிக்கின்றனர். தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் சரி செய்யப்படும்.
சட்டப்பேரவைத் தேர்தல் வேறு, மக்களவைத் தேர்தல் வேறு என பிரித்து பார்த்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள்.தமிழ்நாட்டு மக்கள் விழிப்புடன் உள்ளனர்; எந்த சமயத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என கருதி வாக்களிக்கிறார்கள்.வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அதிமுக வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
நான் முதலவரானபோது பல்வேறு தகவல்கள் வந்தது. மூன்று அல்லது நான்கு மாதம் இருப்பாரா? நான்காண்டு இரண்டு மாதம் சிறப்பான ஆட்சி தந்ததாக பேசியவர்,பிறகு கட்சி இரண்டாகும் என அவதூறு பிரசாரம் செய்தனர்.
அதிமுக தலைவர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் சரி தொடர்ந்து தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. வெற்றி வரும்வரை பயன்படுத்திக் கொள்கிறார்கள்;வெற்றி பெற்ற பின்னர் தமிழகத்தை மறந்து விடுகிறார்கள்.இந்த நிலை மாறவேண்டும் என்பதால்தான் தனித்துப் போட்டியிட்டது.ஆட்சி அதிகாரம் வேண்டுமென்றால் தேசிய கட்சியுடன் அதிமுக சேர்ந்து இருக்கும் என்றார்.
திமுக கூட்டணி என்ன சாதிக்கப் போகிறது
தமிழ்நாட்டு உரிமையை காக்கவும், உரிமைகள் பறிபோகும் போது தடுக்கவும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயல்படவும் அதிமுக இந்த முடிவை எடுத்தது. தமிழக புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி என்ன சாதிக்கப் போகிறது என்பதை பார்க்கத்தானே போகிறோம் என்று எடப்பாடி கூறினார்.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு செல்வீர்களா? என்று கேட்டதற்கு அதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை
பாஜகவுன் கூட்டணியில் இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததைப் பற்றி பேசக்கூடாது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக மீண்டும் வலுப்பெறும். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி இல்லை என்று ஏற்கனவே நான் கூறியதை மீண்டும் தெரிவிக்கிறேன்.
மேலும் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் ,கழகத் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் நேரத்தில் எங்களுடன் கூட்டணி அமைத்து அந்த கூட்டணி வேட்பாளர்களுக்கும் வாக்களித்த பொதுமக்களுக்கும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.
தேமுதிக மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கூறியுள்ளனர் என்ற கேள்விக்கு, மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் என கேட்டுள்ளனர். நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தன்னிடமும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகிகள் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறுகிறார்கள் என்று கேட்டதற்கு,அப்படி இருந்தால் எப்படி ஒரு சதவீதம் வாக்கு அதிகரித்திருக்கும். இந்த தேர்தலில் ஒரு ச
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.