வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக தலைவர் அன்புமணிராமதாஸ்.  
தற்போதைய செய்திகள்

நீட் தேர்வில் தமிழகத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூடி அறிவிப்போம் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.

DIN

வேலூர்: நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக நிலைபாட்டை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூடி அறிவிப்போம் என பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் தெரிவித்தார்.

வேலூர் அடுத்த கொணவட்டம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற பாமக வேலூர் மாவட்டத்தலைவர் இல்ல திருமணத்தில் அன்புமணிராமதாஸ் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவின் நிலைபாடு என்ன என்பதை இரண்டு நாட்களில் நிர்வாக குழு கூட்டத்திற்கு பிறகு எங்களுடைய முடிவை தெரிவிப்போம்.

நீட் தேர்வு தேவை கிடையாது

சமூக நீதிக்கும், கிராமபுற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வு தேவை கிடையாது. குறைந்தது தமிழகத்திலாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம்.

பாமக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததற்க்கு காரணமே நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்பதற்க்காகத்தான். தற்போது வந்துள்ளார் இந்தியாவை மூன்றாவது பொருளாதார நாடாக உலகளவில் எடுத்து செல்வார்.அதே போல் இந்தியா சார்ந்த சமூக நீதி பிரச்னைகளை வலியுறுத்தி தீர்வு காண்போம். காவிரி நீர் பிரச்ணை தீர்க்கபட வேண்டும்.அதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.அதனை தீர்க்க முயற்சி செய்வோம். காவிரி தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்னை 50 லட்சம் விவசாயிகள், 4 கோடி மக்கள், 22 மாவட்டங்கள் பயனடைகிறது. இரு மாநிலங்களும் சுமூக தீர்வு காண வேண்டும். அங்கு காங்கிரஸ் ஆட்சி இங்கு திமுக கூட்டணி ஆட்சி இதற்கு தீர்வு வேண்டும்.

செயலில் ஒன்றுமில்லை

தமிழக முதல்வர் போதை பொருளை மும்முரமாக ஒழிப்பதாக சொல்வது செயலில் ஒன்றுமில்லை. நான் முதல் சந்திப்பில் முதல்வரிடம் போதை பொருளை ஒழிக்க சொன்னேன். கஞ்சா, அபின் போன்றவைகளை ஒழிக்க மாதம் தோறும் கூட்டம் நடத்தி ஒழிக்க சொன்னேன். ஆனால் கஞ்சா 1.0 ,2.0 என சொல்லி 5 ஆயிரம் பேரை கைது செய்வார்கள்,அவர்கள் ஜாமீனில் வெளி வந்துவிடுவார்கள் மதுவை விட கஞ்சா போதை பொருள் பிரச்னையால் மாணவர்கள் பாதிக்கபடுகின்றனர். இதனை தடுக்க தமிழக முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என அன்புமணிராமதாஸ் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT