தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தாயார் கே.பி.செல்வி (40). 
தற்போதைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் வேட்புமனு தாக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

DIN

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

ஜுலை 10 - ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 14 ஆம் தேதி மனுதாக்கல் தொடங்கியது. வியாழக்கிழமை வரை 24 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கடைசி நாளான வெள்ளிக்கிழமையும் மனு தாக்கல் பெறப்பட்டது.

இதில் 2022 ஜூலை 12-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதியின் தாயார் கே.பி.செல்வி (40), கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரான மு.சந்திரசேகரிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பின்னர்,தனது குழந்தைக்கு ஏற்பட்ட கஷ்டம் மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக் கூடாது என்பதற்காகத் தான் தேர்தலில் போட்டியிடுவதாக செல்வி தெரிவித்தார்.

இது போல், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எம்.எஸ். ஆறுமுகம் (58), விதவைக் கோலம் போல வெள்ளை சேலை அணிந்து வந்தும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்த அகிம்சா சோஷலிஸ்ட் கட்சியின் தி.ரமேஷ் , காந்தியவாதி போன்று வேடம் அணிந்து வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி முதல்வரை சந்தித்த கூட்டணி கட்சித் தலைவர்கள்!

எஸ்டிஆர் - ராம்குமார் கூட்டணி... இருக்கு, ஆனா இல்லை!

இந்தியா இறந்த பொருளாதாரமா? டிரம்ப்பின் பொய்யான விமர்சனத்துக்கு அவரது நிறுவனமே சாட்சி!

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் வேலை: காலியிடங்கள்: 105

ராமேசுவரம் - பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்றுசெல்லும்!

SCROLL FOR NEXT