4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்டமுன்வடிவு தாக்கல்: அமைச்சர் கே.என். நேரு
தமிழகத்தில் 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமுன்வடிவை பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார்.
சென்னை: தமிழகத்தில் 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமுன்வடிவை பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார்.
சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய 4 நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான சட்டமுன்வடிவை பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தாக்கல் செய்தார்.
இந்த சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நாளை சனிக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.