தற்போதைய செய்திகள்

சேலம் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் ஆசிரியர் கைது

DIN

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பணியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்வித்துறை நடவடிகக்கை எடுத்துள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் புதுப்பாளையம் ஊராட்சி, அரிசிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த வெள்ளாளபுரம் கிராமம், பாச்சாலியூா் பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் (42) பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த கொங்கணாபுரம் போலீசா போக்சோ சட்டத்தில் பழனியப்பனைக் கைது செய்து விசாரமை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பழனியப்பனை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT