முகப்பு
தற்போதைய செய்திகள்

எச்சிஎல் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டம்!

எச்.சி.எல். டெக் நிறுவனம் 10,000 புதிய பணியாளர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

Updated On : 13 மே 2024, 12:32 pm IST
பகிர்:

மார்ச் மாத காலாண்டில் 2,700 க்கும் மேற்பட்ட ஊழியர்களை எச். சி. எல். டெக் நிறுவனம் பணி அமர்த்தியிருந்தது. ”தற்போதைய சூழ்நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சி 5.4 சதவிகிதமாக இருப்பதால் எச்.சி.எல் டெக்னாலஜியின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடாது” என்று தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான சி.விஜயகுமார் கூறினார்.

இந்தக் கட்டத்தில் 10,000 புதியவர்களை பணியமர்த்தவுள்ளதாக எச்.சி.எல். டெக் திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். .

செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விஜயகுமார் கூறுகையில், "தற்போதைய சூழலில் நாங்கள் 5.4 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருந்ததால், ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது அதிகமாக இருக்கக்கூடாது, எனவே அதைச் செயல்படுத்த நல்ல திறமை தேவை, அதனால்தான் எங்கள் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறோம். எஃப்ஒய்25க்கு வருவது, இந்தாண்டு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்தது. இந்த கட்டத்தில், இந்த ஆண்டில் குறைந்தது 10,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம்".

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.