முகப்பு
தற்போதைய செய்திகள்

மீண்டும் சென்னையில் மழை எப்போது? பிரதீப் ஜான் தகவல்!

சென்னையில் நவ. 12 ஆம் தேதியில் இருந்து மழை ஆரம்பம்.

Updated On : 8 நவம்பர், 2024 at 8:47 AM
நவ. 12-ல் சென்னையில் மழை ஆரம்பம்!
பகிர்:

சென்னை உள்ளிட்ட அதன் புறநகர் மாவட்டங்களில் நவ. 12-ஆம் தேதியில் இருந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2 நாள்களாக கடலோர மாவட்டங்களில் பெய்தவந்த மழையானது, தற்போது தென் தமிழகத்துக்கு மாற்றம் அடைந்துள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று(நவ. 8) மழை பெய்யும்.

மேலும், நாகை-திருவாரூரை சுற்றியுள்ள டெல்டா பகுதிகளிலும் மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாக மழை பெய்துவந்த நிலையில், இன்று நல்ல இடைவேளை கிடைத்துள்ளது.

மீண்டும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நவ. 12-லிருந்து மழை ஆரம்பிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →