மேட்டூர் அணை நிலவரம்!
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு.
தற்போதைய செய்திகள்மேட்டூர் அணை நிலவரம்!
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.34 அடியிலிருந்து 106.10அடியாக குறைந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,790 கன அடியிலிருந்து வினாடிக்கு 4992 கன அடியாக குறைந்தது.
இதையும் படிக்க: சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை!
டெல்டா பாசனப் பகுதிகளில் தேவை குறைந்ததால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர் இருப்பு 72.97 டிஎம்சியாக உள்ளது.