திலக் வர்மா படம் | பிசிசிஐ
தற்போதைய செய்திகள்

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா? 219 ரன்கள் குவிப்பு!

DIN

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் திரட்டினார். அவர் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 8 பவுண்டரிகளையும் விளாசினார்.

அபிஷேக் ஷர்மா 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். அவர் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டினார்.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போராட்டத்தைக் கைவிட தூய்மைப் பணியாளர்கள் மறுப்பு!

74 வயதிலும் சூப்பர் ஸ்டார்... ரஜினியை இயக்கும் ஈகோ!

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 7 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT