FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தற்போதைய செய்திகள்

3-வது டி20: இந்தியா 219 ரன்கள் குவிப்பு!

வெற்றியை உறுதி செய்யுமா இந்தியா? 219 ரன்கள் குவிப்பு!

Updated On : 13 நவம்பர் 2024, 10:43 pm IST
திலக் வர்மா - படம் | பிசிசிஐ
பகிர்:

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3-ஆவது டி20 ஆட்டம், செஞ்சுரியன் நகரில் புதன்கிழமை (நவ. 13) நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இளம் வீரர் திலக் வர்மாவின் அதிரடி சதத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்கள் குவித்துள்ளது.

திலக் வர்மா 56 பந்துகளில் 107 ரன்கள் திரட்டினார். அவர் 7 சிக்ஸர்களை பறக்கவிட்டதுடன், 8 பவுண்டரிகளையும் விளாசினார்.

Advertisement

Advertisement

அபிஷேக் ஷர்மா 25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் கடந்தார். அவர் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் திரட்டினார்.

முந்தைய இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால், தொடா் தற்போது சமனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments