தற்போதைய செய்திகள்

தொடர் அமளி: மாநிலங்களவை டிச. 2 வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக ஒத்திவைப்பு

DIN

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாக டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் அதானி மீதான அமெரிக்க நீதித் துறையின் லஞ்ச குற்றச்சாட்டு, உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் நடந்த வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகிய விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று(நவ. 29) 4-ஆவது நாளாக முடங்கியது.

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடர் தொடங்கிய கடந்த திங்கள்கிழமை முதல், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டு, சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது நிகழ்ந்த வன்முறை ஆகிய விவகாரங்கள் குறித்து உடனடி விவாதம் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வந்தனர்.

எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டுவந்த நிலையில், டிச. 2 ஆம் தேதி காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவா் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அமளிக்கு மத்தியில் ஜகதீப் தன்கர் பேசுகையில், ”இதை ஊக்குவிக்க முடியாது. தவறான முன்னுதாரணத்தை நாம் உருவாக்குகிறோம். பொறுத்தமற்ற நிலைக்கு நாம் செல்கிறோம்” என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திரைத்துறையில் 20 ஆண்டுகள்... ரெஜினா கேசண்ட்ராவுக்கு குவியும் வாழ்த்துகள்!

அறிமுகமான நாளில் எம்வீ ஃபோட்டோ வாலாட்டிக் பங்குகள் 1% உயர்வு!

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு கனமழை | செய்திகள்: சில வரிகளில் | 18.11.25

தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!

ஆஷஸ் தொடர்: வேகப் பந்துவீச்சாளர்களுக்கு ஜேம்ஸ் ஆண்டர்சன் கொடுத்த அறிவுரை!

SCROLL FOR NEXT