முகப்பு
தற்போதைய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 11 அக்டோபர், 2024 at 4:38 AM
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கூலித் தொழிலாளி பத்திரசாமி
பகிர்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 5 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி வியாழக்கிழமை அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் விரைந்து விசாரணை மேற்கொண்ட மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →