முகப்பு
தற்போதைய செய்திகள்

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை கரையை கடக்க உள்ள நிலையில், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:10 AM
பாம்பன் துறைமுகத்தில் புதன்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
பகிர்:

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை நாளை கரையை கடக்க உள்ள நிலையில், பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு புதன்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை, வியாழக்கிழமை(அக்.17) கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதனால், ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் செல்லும் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, பாம்பன் படகு தளத்தில் புதன்கிழமை ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

Advertisement

இதனால், மீனவா்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments