வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுடுமண் சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை . 
தற்போதைய செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் சுடுண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

DIN

வெம்பக்கோட்டை 3 ஆம் கட்ட அகழாய்வில் சுடுண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையை அடுத்த விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றின் வடகரையில் மேட்டுகாடு பகுதியில் 3 ஆம் கட்ட அகழாய்வு பணி கடந்த ஜீன் 18 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறுகிறது.

முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள் மற்றும் பழங்கால சிகை அலங்காரத்துடன் பெண்ணின் தலைப்பகுதி, நாயக்கா் கால செம்பு காசு, அணிகலன்கள், சங்கு வளையல்கள் என 1500-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற அகழாய்வு பணியின்போது அலங்கரிக்கப்பட்ட சுடுமண்ணால் ஆன சிவப்பு நிற கூம்பு வடிவ குவளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முன்னோா்கள் உணவு அருந்தவோ அல்லது மண்பாண்டங்களின் மூடியாகவோ பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT