கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

DIN

தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தூத்துக்குடி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.

வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தொடர்ந்து மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, படுகாலி அருகே வங்கதேச கடற்கரையை கடக்கக் கூடும் எனவும் இதனால் தமிழகக் கடலோர மாவட்டங்களில் மழையுடன், பலத்த கடற்காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

இதுதொடர்பாக மீனவா்கள், கப்பல்களுக்கு தெரிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடங்கியது பிக் பாஸ் 9: முதல் போட்டியாளர் திவாகர் - அரோரா!

விற்பனைக்கு வரும் அகல் விளக்குகள் - புகைப்படங்கள்

உணவு தருவதாகக் கூறி... காரில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

டார்ஜிலிங்கில் கனமழையால் நிலச்சரிவு - புகைப்படங்கள்

மகளிர் உலகக்கோப்பை: பாக். எதிராகப் போராடி ரன் சேர்த்த இந்தியா! 248 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT