கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்: ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கேட்பாரின்றி கிடந்த 500 கிலோ ரேசன் அரிசி ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
சென்னை விம்கோ நகர் ரயில்வே நடைமேடையில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நடைமேடை பகுதியில் பயணியர் அமரும் இருக்கையின் கீழ், மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்படி, 25 கிலோ எடையுள்ள 20 மூட்டை அரிசியை கைப்பற்றிய கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேசன் அரிசியை, பட்டரவாக்கம் குடிமை பொருள் வழங்கல் சிஐடி வசம், ஒப்படைத்தனர்.
வடசென்னை இருந்து ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக நடைபெற்று வருவதாகவும் இதை தடுக்கும் நோக்கத்தில் போலீசார் ஈடுபட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.