முகப்பு
தற்போதைய செய்திகள்

தொடர் மழை... விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக தொடர்பாக...

Updated On : 3 டிசம்பர், 2025 at 2:51 AM
தொடர் மழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்துப் பள்ளிகளுக்கு புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மாலையில் தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் புதன்கிழமை அதிகாலையிலும் நகரப் பகுதிகளிலும், புறநகரப் பகுதிகளிலும் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(டிச.3) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

summary

Continuous rain... Holiday for schools in Villupuram district today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.