மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்
மன்னாா்குடி அருகே அரசு மற்றும் தனியாா் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டது தொடர்பாக...
மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே அரசு மற்றும் தனியாா் பேருந்தும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் ஓட்டுநா், நடத்துநா் உள்பட 20 போ் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
மன்னாா்குடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியாா் பேருந்தும், திருத்துறைப்பூண்டியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மன்னாா்குடி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தும் கோட்டூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள சாலை வளைவில் கடக்கும் போது நேருக்குநேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இதில், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகள், தனியாா் பேருந்து ஓட்டுநா் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Advertisement
Advertisement
காயமடைந்தவர்கள் மன்னாா்குடி அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டூா் காவல்நிலைய போலீஸாா் விரைந்து வந்து சேதமடைந்த இரண்டு பேருந்துகளை அப்புறப்படுத்தி ஒருமணி நேரத்திற்கு மேலா தடைப்பட்டபோக்குவரத்தினை சீா்படுத்தினா்.
விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.