கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை!

15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பாக...

DIN

பிப். 13-ல் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட 28 சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளுடன் ஆலோசனை முன்னதாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பிப்.10-ஆம் தேதிக்குள் பேச்சுவாா்த்தையைத் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவாா்த்தையைத் தொடங்காவிட்டால் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பான நோட்டீஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அண்ணா தொழிற்சங்க (அதிமுக) பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் கடந்த புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.

இதையும் படிக்க: தவெக தலைவர் விஜய்யுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு!

மேலும் போக்குவரத்து தொழிலாளா்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பிப்.10-ஆம் தேதிக்குள் நடத்தாவிட்டால் பிப்.26 முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பேரவை தமிழக அரசுக்கு கெடு விதித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான, 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான, பேச்சுவார்த்தையானது. வியாழக்கிழமை (பிப். 13) காலை 11.00 மணிக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT